ராதேக்ருஷ்ணா ....
ஜெய் அனந்தபத்மநாப ஸ்வாமி....
இன்று நம்மை பகவானிடம் சேரவிடாமல் தடுக்கும் காமம்,கோபம்,பயம், பொறாமை,வெறுப்பு,சோம்பல் போன்ற பல ராக்ஷசர்களை வேட்டையாடும் நாள் வந்தது...
இந்த வேட்டையாடும் தினத்தை ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கையிலிருக்கும் வில்லுக்கும் அம்புக்கும் சமர்ப்பிப்போம் ....
இன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் 8மணி அளவில் வேட்டை உற்சவம்...
பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு வெளியில் வந்து, நம்முள் இருக்கும் அசுரர்களை வதைத்து நம்மை ரக்ஷிக்கப்போகிறார்...
பகவான் கையிலிருக்கும் திவ்ய வில்லே...தெய்வீக அம்பே....
என்னை நோக்கி பாய்ந்து வந்து, என்னுள் இருக்கும் அசுரரை வதைத்து, என்னை அநந்தபத்மநாபனின் காதலியாக்கிவிடு....
வேட்டை உற்சவம் வீடியோ...
Watch "Palli Vetta. Sri Padmanabhaswamy Temple." on YouTube - Palli Vetta. Sri Padmanabhaswamy Temple.: http://youtu.be/hzyUKKRLr4o
No comments:
Post a Comment